Pages

Thursday, 21 July 2011

தோழியே தோள் கொடு!!!!!!!

  • உண்மையாக நேசிப்பவர்கள் எளிதாக கிடைப்பதில்லை.....
    இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல்
    நேசிப்பார்களா தெரியவில்லை என் தோழியே!!!!
    "FRIEND" என்ற வார்த்தைபிடிக்கவில்லை எனக்கு...!!
    காரணம் அதில் "END" இருப்பதனால்...!!
    ஒரு வார்த்தையில் கூட நமக்குள் "END" இருக்க கூடாது....
    So நீ எனக்கு
    "நண்பிடீ"
    நல்ல வேளையாக உன்னை சந்தித்தேன், இல்லையெல்.....
    நட்பிற்க்கு விடை தெரியாது போயிருக்கும்...
    நினைவில் வைத்துகனவில் காண்பதல்ல நட்பு,
    மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் உண்மையான நட்பு!!
    நீ தோழியாய் கிடைப்பாய் என்று கருவறையில் இருக்கும் போதே
    தெரிந்து இருந்தால், நான் பிறக்கும் போது அழுதிருக்க மாட்டேன்....
    தேவையின் போது தோள்களில் சாய..... துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க.....
    மகிழ்ச்சியின் போது மனம் மகிழ......நானாக நானிருக்க.... நீ எனக்கு வேண்டும் நட்பாக !...
    நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை !
    நான் வேறு நீ வேறேன்றால் நட்பு என்று பெயரில்லை !
    சிறகுகள் கிடைத்தவுடன்பறப்பதல்ல நட்பு . . .
    சிலுவை கிடைத்தாலும்சுமப்பதே நட்பு . . 
    மரணத்தின் முன் ஒரு நாள் நீயும் நானும் சந்தித்துக்கொண்ட நாள் பற்றி உன்னோடு பேச வேண்டும்
    என் முதல் துளி கண்ணீரில் என் துக்கமும்
    இறுதித்துளிக்கண்ணிரில் உன் பாசமும் இருக்கிறது...
    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆனதடி !
    நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி !
     
     
     
     
     
     
     
     
     
     



Wednesday, 20 July 2011

தோழி !!!!!!!!

தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

Friday, 8 July 2011

கடலை செய்யும் நேரம் இது!

நீண்ட மௌனங்களின்...
எதிரி!


காற்றே புகாத இடத்தில்...
நீரே இல்லாத நாட்டில்...
கடலைக்கு மட்டும்...
அனுமதி கொடுங்கள்!
காற்றும் நீரும்
முக்கியமாய் படாது!


-கடலை
மூன்றே எழுத்துகளில்
முப்பதாயிரம் அர்த்தங்கள்!

-கடலை
கல்லூரி மாணவர்களின்
தேசியகீதம்!

இதயத்தின்
அடிப்பாகத்தினிலே
அமிழ்ந்து கிடக்கின்ற
தூங்கிக் கொண்டிருக்கிற...
சந்தோஷத்தை
தண்ணீர் தெளித்து எழுப்புகிறது!


கல்லூரியின்
செலபஸ்ஸை விடவும்
சிறப்பு வாய்ந்த பாடம்
இந்த
வார்த்தைக்குள்ளே
வழிந்துகொண்டிருக்கிறது!

கழுத்துப்பக்கம்
கடப்பாறையை நீட்டினாலும்...
கடலையை நிறுத்தமுடியாது!

Kadalai is
injurious to health

பாம் வைத்து...
பிரிக்க நினைத்தாலும்
வெடித்த பிறகும்
வறுக்கப்படும்!

கல்லூரி காலத்தை
நினைத்துப்பார்க்கின்ற
எல்லா மாணவர்களின்
மனசுக்குள்ளும் வந்துபோகின்ற...
முதல்வார்த்தை!

கடலை ஒரு
வித்தியாசமான அணுபவம்!

ஆக்கலாம்
அழிக்கலாம்
ஒருவகை கடலையை
இன்னொருவகை கடலையாக
மாற்றலாம்!

மாணவர்களின்
ஓய்வு நேரத்தைப் பார்த்து
ஓடிவரும்!

என்டரன்ஸ் எழுதாமலேயே...
கோட்டா கொடுக்காமலேயே...
ஆர்ட்ஸ்-என்சினியரிங்
மெடிக்கல் கல்லூரியில் வந்து...
மெதுவாய் இடம் பிடித்துக்கொள்ளும்!

உணவு
உடை
இருப்பிடம்
கடலை!

-கடலை-
மேகமூட்டம்(புகை) இருந்தாலும்
மழைவராத
வித்தியாசமான
இயற்கை சூழ்நிலை!


கடலை பற்றி எழுதினால் - இந்த
காகிதம் பத்தாது!
மன்னித்துக்கொள்ளுங்கள்
முடித்துக்கொள்கிறேன்!


இந்த நேரத்தில் கூட
வறுபட்டுக்கொண்டிருக்கும் கடலைக்கு
இந்த
கவிதையை சமர்ப்பித்துவிட்டு
கிளம்பிவிட்டேன்
"கடலை செய்யும் நேரம் இது!"

உன்னை விட்டு விட என்ன செய்வது?

ஒரு அதிகாலை குளிரின்
பனித்துளிகள் சேகரிக்கும்..
பாதையொன்றினில் - ஏதோ ஒரு
மணித்துளியினில் என்னில் வந்து..
மாட்டிக்கொண்டாய்!

சுற்றிக்கொண்டு..
சுவாசம் தர மறுக்கின்றாய்!

விலகி விட நினைத்தால்..
நெருக்கம் இறுக்குகிறாய்!

உன்னை விட்டு விலக..
அறிவுரைகளும் , ஆறுதல்களும்
வந்துகொண்டே யிருக்கின்றன!

எதை விடுவது எதை தொடுவது?

என் மீதான் காதல்
அதிகப்பட்டுப்போனதால்...
அறிவுரைகளை அலட்சியப்படுதியவன்
பின்பற்றுகின்றேன்..

நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?