ஒரு அதிகாலை குளிரின்
பனித்துளிகள் சேகரிக்கும்..
பாதையொன்றினில் - ஏதோ ஒரு
மணித்துளியினில் என்னில் வந்து..
மாட்டிக்கொண்டாய்!
சுற்றிக்கொண்டு..
சுவாசம் தர மறுக்கின்றாய்!
விலகி விட நினைத்தால்..
நெருக்கம் இறுக்குகிறாய்!
உன்னை விட்டு விலக..
அறிவுரைகளும் , ஆறுதல்களும்
வந்துகொண்டே யிருக்கின்றன!
எதை விடுவது எதை தொடுவது?
என் மீதான் காதல்
அதிகப்பட்டுப்போனதால்...
அறிவுரைகளை அலட்சியப்படுதியவன்
பின்பற்றுகின்றேன்..
நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?
nice da
ReplyDelete