Pages

Saturday, 29 October 2011

Difference Between LOVE and LIKE


In front of the person you love, your heart beats faster
But in front of the person you like , you get happy.

In front of the person you love, winter seems like spring
But in front of the person you like, winter is just a beautiful winter.

If you look into the eyes of the one you love, you blush
But if you look into the eyes of the one you like, you smile.

In front of the person you love, you can' t say everything on your mind
But in front of the person you like, you can.

In front of the person you love, you tend to get shy
But in front of the person you like, you can show your ownself.

Then person you love comes into your mind every 2 minutes.
You can't look straight into the eyes of the one you love
But you can always smile into the eyes of the one you like.

When the one you love is crying, you cry with them
But when the one you like is crying, you end up comforting.

The feeling of love starts from the eye
And the feeling of like starts from the ear.

So if you stop liking a person you used to like
All you need to do is cover your ears,
But if you try to close your eyes
Love turns into a drop of tear and remains in your heart forever after.
 
-Fredrick Braiman A

Tuesday, 11 October 2011

நண்பன் கொடுத்த வரம்



உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான். கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ. சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில், உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய். திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய்.
 
எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது. ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும், நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம். வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.

சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல , காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய். குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில், தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு. ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள். ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ. இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும், உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.

"என்ன தம்பி யோசிக்கிறீங்க" என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,சமாளிப்பாக " இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் " என்று சொல்ல…
"அது பூஸ்ட்ங்க…" என்கிறாய் நீ.

எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன். நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய். பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும். "என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?" என மெல்லக் கேட்கும் அம்மாவிடம், "பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்" என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன். அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை "உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்" எனக் கத்திவிட்டு மறைகிறாள். இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.

முகத்தில் மலர்ச்சியோடு, " அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா…." என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.
"உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே… அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்… அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்" என்கிறேன் நான். சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.

"வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…" என ஆரம்பிக்கிறார் உன் அம்மா."உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்… அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்" என மறுபடியும் மறுக்கிறேன் நான்.

"என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க" என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…"உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும் சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்" என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.

வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன். அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ. விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.

"உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா, அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா" என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.

நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது

Tomorrow can be too late





If you're angry with someone and nobody's there to fix the situation... fix it yourself. Maybe today, that person still wants to be your friend. And if u don't, tomorrow can be too late.
If you're in love with somebody, but that person doesn't know...
tell her/him. Maybe today, that person is also in love with you. And if you don't say it, tomorrow can be too late..

If you still love a person that you think has forgotten you...
tell her/him. Maybe that person has always loved you. And if you don't tell her/him today, tomorrow can be too late.


If you need a hug of a friend... ask her/him for it.
Maybe they need it more than you do. And if you don't ask for it today, tomorrow can be too late.


If you have friends whom you really appreciate... tell them. Maybe they appreciate you as well. they may leave or go far away today, tomorrow can be too late.


If you love your parents, and never had the chance to show them... do it. Maybe today you have them to show them how you feel. if you don't and they leave today, then tomorrow can be too late.






Wednesday, 10 August 2011

காதல் என்பது யாதெனில்

             காதல்........ இதற்கு இதுதான் அர்த்தம் என்று இன்று வரை யாருமே வகுத்து வைக்கவில்லை. அது முடியாத காரியமும் கூட.கண்டதும் காதல், காணாமலே காதல், சொல்லாமலே காதல் என்று நாமும் பல விதங்களில் காதலை பார்த்து இருக்கிறோம்.சிலர் காதலை புதிரானது என்கிறார்கள்.  சிந்தனையைத் தூண்ட உதவும் காதல், காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது சிலரின் வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் காதலுக்கு சிலர் வகுத்துள்ள இலக்கணங்கள்.காதலில் விழுந்தவர்கள் முதலில் கவிஞராகிறார்கள். பிறகு அவர்கள் பேசினாலே கவிதை மழைதான்.

”நிலவு சுடும்
சூரியன் சுகமாகும்
காதல்”

காதலியை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கும் காதலனுக்கு நிலவு கூட தகிப்பை, தவிப்பைத் தருகிறது. ஆனால் அவளை சந்திக்கப் போகும் பகலை நினைத்தால் சூரியனின் அனல் கூட அவனுக்கு சுகமாகத் தெரிகிறதாம்.

”உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது
நான் பலம் பெற
மீண்டும் ஒரு முறை சிரியேன்”

அவளின் புன்னகையில் வீழ்ந்து போன அவனுக்கு மீண்டும் பலம் பெற அதே சிரிப்பு தேவைப்டுகிறது. காதலின் வினோதம் இது.
 இப்படி கவிதை அருவியில்  நனைகிறார்கள் உலகக் காதலர்கள்.
 கண்கள் சந்தித்த நொடியில் என் இதயத்தில் அவள் விழுந்தாள் என்பதுதான் காதல் வயப்பட்ட அத்தனை ஆண்களும் சொல்லும் ஒரே வார்த்தையாக உள்ளது.

அதேசமயம், இன்றுள்ள இளைஞர்களும் சரி, இளம் பெண்களும்  சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண்/ஆண்  பேசினால், உடனே அந்தப் பெண்/ஆண்  மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இது மட்டும் அல்ல காதல், இதோடு  சேர்த்து பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். 

 ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.
 காதல் ஒரு மனிதனை முழுமையாக்க உதவுகிறது. ஏனோதானோவென்று இருக்கும் ஒருவன் காதல் வயப்பட்டவுடன் மாறிப் போவதை நாம் பார்க்கலாம். காதலுக்கு மட்டும்தான் அந்த சக்தி.அது ஏன் காதல் வயப்பட்டால் மட்டும் மாறுகிறார்கள்?.

காதல் வயப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுகிறது, புதிய அந்தஸ்து கிடைத்த சந்தோஷத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஏற்படுவதே இந்த மாற்றம். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.

நட்போடு பேசினால், நாலு வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. வார்த்தைகளில் வருவதல்ல காதல், வாழ்கை முழுவதும் வருவது தான் காதல். கவிதை எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, ‘அவுட்டிங்’ கூட்டிச் செல்வது, பணத்தை தாறுமாறாக செலவிடுவது- இதெல்லாமும் கூட காதலாகி விட முடியாது. உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது.

வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.
காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும்.

அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.
உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.
எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்.

--
Fredrick Braiman A

Thursday, 21 July 2011

தோழியே தோள் கொடு!!!!!!!

  • உண்மையாக நேசிப்பவர்கள் எளிதாக கிடைப்பதில்லை.....
    இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல்
    நேசிப்பார்களா தெரியவில்லை என் தோழியே!!!!
    "FRIEND" என்ற வார்த்தைபிடிக்கவில்லை எனக்கு...!!
    காரணம் அதில் "END" இருப்பதனால்...!!
    ஒரு வார்த்தையில் கூட நமக்குள் "END" இருக்க கூடாது....
    So நீ எனக்கு
    "நண்பிடீ"
    நல்ல வேளையாக உன்னை சந்தித்தேன், இல்லையெல்.....
    நட்பிற்க்கு விடை தெரியாது போயிருக்கும்...
    நினைவில் வைத்துகனவில் காண்பதல்ல நட்பு,
    மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் உண்மையான நட்பு!!
    நீ தோழியாய் கிடைப்பாய் என்று கருவறையில் இருக்கும் போதே
    தெரிந்து இருந்தால், நான் பிறக்கும் போது அழுதிருக்க மாட்டேன்....
    தேவையின் போது தோள்களில் சாய..... துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க.....
    மகிழ்ச்சியின் போது மனம் மகிழ......நானாக நானிருக்க.... நீ எனக்கு வேண்டும் நட்பாக !...
    நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை !
    நான் வேறு நீ வேறேன்றால் நட்பு என்று பெயரில்லை !
    சிறகுகள் கிடைத்தவுடன்பறப்பதல்ல நட்பு . . .
    சிலுவை கிடைத்தாலும்சுமப்பதே நட்பு . . 
    மரணத்தின் முன் ஒரு நாள் நீயும் நானும் சந்தித்துக்கொண்ட நாள் பற்றி உன்னோடு பேச வேண்டும்
    என் முதல் துளி கண்ணீரில் என் துக்கமும்
    இறுதித்துளிக்கண்ணிரில் உன் பாசமும் இருக்கிறது...
    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆனதடி !
    நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி !
     
     
     
     
     
     
     
     
     
     



Wednesday, 20 July 2011

தோழி !!!!!!!!

தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

Friday, 8 July 2011

கடலை செய்யும் நேரம் இது!

நீண்ட மௌனங்களின்...
எதிரி!


காற்றே புகாத இடத்தில்...
நீரே இல்லாத நாட்டில்...
கடலைக்கு மட்டும்...
அனுமதி கொடுங்கள்!
காற்றும் நீரும்
முக்கியமாய் படாது!


-கடலை
மூன்றே எழுத்துகளில்
முப்பதாயிரம் அர்த்தங்கள்!

-கடலை
கல்லூரி மாணவர்களின்
தேசியகீதம்!

இதயத்தின்
அடிப்பாகத்தினிலே
அமிழ்ந்து கிடக்கின்ற
தூங்கிக் கொண்டிருக்கிற...
சந்தோஷத்தை
தண்ணீர் தெளித்து எழுப்புகிறது!


கல்லூரியின்
செலபஸ்ஸை விடவும்
சிறப்பு வாய்ந்த பாடம்
இந்த
வார்த்தைக்குள்ளே
வழிந்துகொண்டிருக்கிறது!

கழுத்துப்பக்கம்
கடப்பாறையை நீட்டினாலும்...
கடலையை நிறுத்தமுடியாது!

Kadalai is
injurious to health

பாம் வைத்து...
பிரிக்க நினைத்தாலும்
வெடித்த பிறகும்
வறுக்கப்படும்!

கல்லூரி காலத்தை
நினைத்துப்பார்க்கின்ற
எல்லா மாணவர்களின்
மனசுக்குள்ளும் வந்துபோகின்ற...
முதல்வார்த்தை!

கடலை ஒரு
வித்தியாசமான அணுபவம்!

ஆக்கலாம்
அழிக்கலாம்
ஒருவகை கடலையை
இன்னொருவகை கடலையாக
மாற்றலாம்!

மாணவர்களின்
ஓய்வு நேரத்தைப் பார்த்து
ஓடிவரும்!

என்டரன்ஸ் எழுதாமலேயே...
கோட்டா கொடுக்காமலேயே...
ஆர்ட்ஸ்-என்சினியரிங்
மெடிக்கல் கல்லூரியில் வந்து...
மெதுவாய் இடம் பிடித்துக்கொள்ளும்!

உணவு
உடை
இருப்பிடம்
கடலை!

-கடலை-
மேகமூட்டம்(புகை) இருந்தாலும்
மழைவராத
வித்தியாசமான
இயற்கை சூழ்நிலை!


கடலை பற்றி எழுதினால் - இந்த
காகிதம் பத்தாது!
மன்னித்துக்கொள்ளுங்கள்
முடித்துக்கொள்கிறேன்!


இந்த நேரத்தில் கூட
வறுபட்டுக்கொண்டிருக்கும் கடலைக்கு
இந்த
கவிதையை சமர்ப்பித்துவிட்டு
கிளம்பிவிட்டேன்
"கடலை செய்யும் நேரம் இது!"

உன்னை விட்டு விட என்ன செய்வது?

ஒரு அதிகாலை குளிரின்
பனித்துளிகள் சேகரிக்கும்..
பாதையொன்றினில் - ஏதோ ஒரு
மணித்துளியினில் என்னில் வந்து..
மாட்டிக்கொண்டாய்!

சுற்றிக்கொண்டு..
சுவாசம் தர மறுக்கின்றாய்!

விலகி விட நினைத்தால்..
நெருக்கம் இறுக்குகிறாய்!

உன்னை விட்டு விலக..
அறிவுரைகளும் , ஆறுதல்களும்
வந்துகொண்டே யிருக்கின்றன!

எதை விடுவது எதை தொடுவது?

என் மீதான் காதல்
அதிகப்பட்டுப்போனதால்...
அறிவுரைகளை அலட்சியப்படுதியவன்
பின்பற்றுகின்றேன்..

நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?

Monday, 20 June 2011

Best Day of My Life


Best Day of My Life
Today, when I awoke, I suddenly realized that tomorrow is the best day of my life, ever! There were times when I wondered if I would make it to today; but I did! And because I did I'm going to celebrate!

 I'm going to celebrate what an unbelievable life I have had so far: I will go through this day with my head held high, and a happy heart.
I will wonder at God's seemingly simple gifts: the morning dew, the sun, the clouds, the trees, the flowers, the birds, none of these miraculous creations will escape my notice.

I will share my excitement for life with other people. I'll make someone smile. I'll go out of my way to perform an unexpected act of kindness for someone I don't even know.

 I'll give a sincere compliment to someone who seems down. I'll tell a child how special he is, and I'll tell someone I love just how deeply I care for her/him and how much she/he means to me.

Tomorrow is the day I quit worrying about what I don't have and start being grateful for all the wonderful things God has already given me.

I'll remember that to worry is just a waste of time because my faith in God and his Divine Plan ensures everything will be just fine.

And tomorrow night, before I go to bed, I'll go outside and raise my eyes to the heavens. I will stand in wonder at the beauty of the stars and the moon, and I will praise God for these wonderful assets.

As the day ends and I lay my head down on my pillow, I will thank the Almighty for the best day of my life. And I will sleep the sleep of a satisfied child, excited with expectation because I know tomorrow is going to be the best day of my life, ever!

Saturday, 18 June 2011

ஆபீஸ்ல free-a இருக்கறவங்களுக்கு ஒரு நல்ல idea

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..
2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..
3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..
4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..
5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..
6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..
7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.
8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..
9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..
10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .
11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..
12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..
 

Thursday, 16 June 2011

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

Remember My Birthday?


As you well know, we are getting closer to My birthday. Every year there is a celebration in My honor and I think that this year the celebration will be repeated. 

It is really very nice to know, that at least once a year, some people think of Me. 

I remember that last year there was a great feast in My honor. The dinner table was full of delicious foods, fruits and chocolates.  The decorations were superb and there were many, many beautifully wrapped gifts. But, do you want to know something? I wasn't invited. I was the guest of honor and they didn't remember to send Me an invitation.

The party was for Me, but when that great day came, I was left outside, they closed the door in my face... and I wanted to be with them and share their table. In truth, that didn't surprise Me because in the last few years all close their doors to me.
   
At 12 midnight all the people began to hug each other; I extended my arms waiting for someone to hug Me and ... do you know ... no one hugged Me. 

  I then understood that I was unwanted at that party and quietly left. Every year it gets worse. People only remember to eat and drink, the gifts, the parties and nobody remembers Me.

I want to share something with you. As many didn't invite Me to their party, I will have my own celebration, a high-flying party that no one has ever imagined, a fantastic party. I'm still making the final arrangements.      
  

I'll be waiting for all of you to attend my party this year...

See you soon... I love you!


Tuesday, 14 June 2011

ஆண்களுக்கம் வெட்கம் வரும்

 எனக்காகப் பிறந்தவளைக்
கண்டு பிடித்தேன்!- அவள்
கண்ணசைவில் ஒரு கோடி
கவிதை படித்தேன்!


என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்!- அவளை
பார்த்தவுடன் அடடா நான்
முழுமை அடைந்தேன்!


இரு இதயம் ஒன்றாய்...
இனி அவள்தான் என் தாய்!

****

வேப்பம் பூ உதிர்கின்ற என் வீட்டு முற்றும்
அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்!
விண்மீன்கள் வந்துபோகும் மொட்டைமாடி
அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம் போகும்


காற்று வந்து கதை பேசும் கொடிக்கயிற்றில்
அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்!
காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து
கடிகார முள்மீது ஆட்டம் போடும்!

****

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல்
புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக் கொள்ளும்
பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால்
பழரசமாய் இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!


பூக்கடைக்குப் போகாத கால்கள் ரெண்டும்
புதுப்பழக்கம் பார் என்று திட்டிச்செல்லும்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் தருணம் உண்டு
என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

நட்புக்காலம்...

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
**
உன்னுடன்

சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..
**
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை!
**
பேருந்து நிறுத்தத்திற்குச்

சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..
**

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை!
***
எல்லாவற்றிலும்

எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்!!
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது!!

Monday, 13 June 2011

Software engineer and his wife .. (FUNNY)

*Husband *- hey dear, I am logged in.

*Wife *- would you like to have some snacks?
*Husband *- hard disk full.

*Wife *- have you brought the saree.
*Husband *- Bad command or file name.

*Wife *- but I told you about it in morning
*Husband *- erroneous syntax, abort, retry, cancel.

*Wife *- hae bhagwan !forget it where's your salary.
*Husband *- file in use, read only, try after some time.

*Wife *- at least give me your credit card, I can do some shopping.
*Husband *- sharing violation, access denied.

*Wife *- I made a mistake in marrying you.
*Husband *- data type mismatch.

*Wife *- you are useless.
*Husband *- by default.

*Wife *- who was there with you in the car this morning?
*Husband *- system unstable press ctrl, alt, del to Reboot.

*Wife *- what is the relation between you & your Receptionist?
*Husband *- the only user with write permission.

*Wife *- what is my value in your life?
*Husband *- unknown virus detected.

*Wife *- do you love me or your computer?
*Husband *- Too many parameters..

*Wife *- I will go to my dad's house.
*Husband *- program performed illegal operation, it will Close.

*Wife *- I will leave you forever.
*Husband *- close all programs and log out for another User.

*Wife *- it is worthless talking to you.
*Husband *- shut down the computer.

*Wife *- I am going
*Husband *- Its now safe to turn off your computer


Saturday, 11 June 2011

காதலித்து பார்

காதலித்து பார் பார் கோவில் ஆகும்
பீர் தெய்வம் ஆகும்.
உன் இம்சை தங்காமல் போன் ஸ்பீக்கர் பழுதாகும், 
உன் போனில் அவளின் பேர் தவிர
மற்ற பெண்களின் போன் நம்பர் அழியும் அல்லது அழிக்கப்படும்.
காதலித்து பார்...
மூன்று நேரமும் போன் கதைத்து செவி பறை கிழிய வேண்டுமா?
காதலித்து பார்.  
அம்மா வீட்டுக்கும் அவளின் ஊருக்கும் 
மாறி மாறி பயணம் செய்யும் நிலை தேவையா....? 
எங்கே நீ நின்றாலும் என்ன நீ செய்தாலும் 
அவள் போன் எடுக்கும் போது அதை சொல்லவேண்டிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா....? 
அதற்காகவேனும் காதலித்து பார். 
அப்பாவிடம் மறைத்து பழகிய உண்மைகள் 
அவளிடம் அம்பலம் ஆகியதுண்டா? 
அடிக்கடி லவ் யு சொல்லும் வெட்டி தனம் தேவையா? காதலித்து பார்.  
இன்பாக்ஸ் பார்த்து அவள் சண்டை பிடிக்கவும் 
நம்பர் பிஸி அல்லது waiting பார்த்து 
அவள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படவும் 
10 மணிக்கு வரும் தூக்கத்தை
இரவு 1 மணிவரை சுமந்து கொண்டு 
போன் கதைக்கும் துன்பம் ஏற்படவும் 
காதலித்து பார். 
நண்பர்களை தனிமையாக்கி தனியே போய் போன் கதைப்பாய்
அவர்கள் திட்டும் போதும் நக்கல் அடிக்கும் போதும் 
சுரணை இல்லாதவன் போல சிரிக்க உன்னால் முடியுமா? 
காதலித்து பார்.

அவள் போன் எடுக்கும் போது 
ஒடனே receive பண்ண வேண்டிய வேகம் வேண்டுமா? 
அவள் அழும்போது
நம்ம weekness பூரா சொல்லவேண்டிய நிலை தேவையா? 
காதலித்து பார்.  
ஒரு தலையா காதலித்தால் 
மகனே தப்பினாய் 
இரண்டு பக்கமும் என்றால் 
சங்கு தான் மவனே....... 
(சாவ தேடி நாம போக கூடாது, சாவு தான் நம்மள தேடி வரணும்)