Pages

Tuesday, 14 June 2011

ஆண்களுக்கம் வெட்கம் வரும்

 எனக்காகப் பிறந்தவளைக்
கண்டு பிடித்தேன்!- அவள்
கண்ணசைவில் ஒரு கோடி
கவிதை படித்தேன்!


என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்!- அவளை
பார்த்தவுடன் அடடா நான்
முழுமை அடைந்தேன்!


இரு இதயம் ஒன்றாய்...
இனி அவள்தான் என் தாய்!

****

வேப்பம் பூ உதிர்கின்ற என் வீட்டு முற்றும்
அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்!
விண்மீன்கள் வந்துபோகும் மொட்டைமாடி
அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம் போகும்


காற்று வந்து கதை பேசும் கொடிக்கயிற்றில்
அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்!
காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து
கடிகார முள்மீது ஆட்டம் போடும்!

****

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல்
புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக் கொள்ளும்
பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால்
பழரசமாய் இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!


பூக்கடைக்குப் போகாத கால்கள் ரெண்டும்
புதுப்பழக்கம் பார் என்று திட்டிச்செல்லும்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் தருணம் உண்டு
என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

No comments:

Post a Comment