Pages

Monday, 20 June 2011

Best Day of My Life


Best Day of My Life
Today, when I awoke, I suddenly realized that tomorrow is the best day of my life, ever! There were times when I wondered if I would make it to today; but I did! And because I did I'm going to celebrate!

 I'm going to celebrate what an unbelievable life I have had so far: I will go through this day with my head held high, and a happy heart.
I will wonder at God's seemingly simple gifts: the morning dew, the sun, the clouds, the trees, the flowers, the birds, none of these miraculous creations will escape my notice.

I will share my excitement for life with other people. I'll make someone smile. I'll go out of my way to perform an unexpected act of kindness for someone I don't even know.

 I'll give a sincere compliment to someone who seems down. I'll tell a child how special he is, and I'll tell someone I love just how deeply I care for her/him and how much she/he means to me.

Tomorrow is the day I quit worrying about what I don't have and start being grateful for all the wonderful things God has already given me.

I'll remember that to worry is just a waste of time because my faith in God and his Divine Plan ensures everything will be just fine.

And tomorrow night, before I go to bed, I'll go outside and raise my eyes to the heavens. I will stand in wonder at the beauty of the stars and the moon, and I will praise God for these wonderful assets.

As the day ends and I lay my head down on my pillow, I will thank the Almighty for the best day of my life. And I will sleep the sleep of a satisfied child, excited with expectation because I know tomorrow is going to be the best day of my life, ever!

Saturday, 18 June 2011

ஆபீஸ்ல free-a இருக்கறவங்களுக்கு ஒரு நல்ல idea

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..
2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..
3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..
4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..
5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..
6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..
7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.
8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..
9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..
10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .
11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..
12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..
 

Thursday, 16 June 2011

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

Remember My Birthday?


As you well know, we are getting closer to My birthday. Every year there is a celebration in My honor and I think that this year the celebration will be repeated. 

It is really very nice to know, that at least once a year, some people think of Me. 

I remember that last year there was a great feast in My honor. The dinner table was full of delicious foods, fruits and chocolates.  The decorations were superb and there were many, many beautifully wrapped gifts. But, do you want to know something? I wasn't invited. I was the guest of honor and they didn't remember to send Me an invitation.

The party was for Me, but when that great day came, I was left outside, they closed the door in my face... and I wanted to be with them and share their table. In truth, that didn't surprise Me because in the last few years all close their doors to me.
   
At 12 midnight all the people began to hug each other; I extended my arms waiting for someone to hug Me and ... do you know ... no one hugged Me. 

  I then understood that I was unwanted at that party and quietly left. Every year it gets worse. People only remember to eat and drink, the gifts, the parties and nobody remembers Me.

I want to share something with you. As many didn't invite Me to their party, I will have my own celebration, a high-flying party that no one has ever imagined, a fantastic party. I'm still making the final arrangements.      
  

I'll be waiting for all of you to attend my party this year...

See you soon... I love you!


Tuesday, 14 June 2011

ஆண்களுக்கம் வெட்கம் வரும்

 எனக்காகப் பிறந்தவளைக்
கண்டு பிடித்தேன்!- அவள்
கண்ணசைவில் ஒரு கோடி
கவிதை படித்தேன்!


என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்!- அவளை
பார்த்தவுடன் அடடா நான்
முழுமை அடைந்தேன்!


இரு இதயம் ஒன்றாய்...
இனி அவள்தான் என் தாய்!

****

வேப்பம் பூ உதிர்கின்ற என் வீட்டு முற்றும்
அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்!
விண்மீன்கள் வந்துபோகும் மொட்டைமாடி
அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம் போகும்


காற்று வந்து கதை பேசும் கொடிக்கயிற்றில்
அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்!
காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து
கடிகார முள்மீது ஆட்டம் போடும்!

****

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல்
புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக் கொள்ளும்
பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால்
பழரசமாய் இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!


பூக்கடைக்குப் போகாத கால்கள் ரெண்டும்
புதுப்பழக்கம் பார் என்று திட்டிச்செல்லும்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் தருணம் உண்டு
என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

நட்புக்காலம்...

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
**
உன்னுடன்

சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..
**
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை!
**
பேருந்து நிறுத்தத்திற்குச்

சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..
**

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை!
***
எல்லாவற்றிலும்

எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்!!
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது!!

Monday, 13 June 2011

Software engineer and his wife .. (FUNNY)

*Husband *- hey dear, I am logged in.

*Wife *- would you like to have some snacks?
*Husband *- hard disk full.

*Wife *- have you brought the saree.
*Husband *- Bad command or file name.

*Wife *- but I told you about it in morning
*Husband *- erroneous syntax, abort, retry, cancel.

*Wife *- hae bhagwan !forget it where's your salary.
*Husband *- file in use, read only, try after some time.

*Wife *- at least give me your credit card, I can do some shopping.
*Husband *- sharing violation, access denied.

*Wife *- I made a mistake in marrying you.
*Husband *- data type mismatch.

*Wife *- you are useless.
*Husband *- by default.

*Wife *- who was there with you in the car this morning?
*Husband *- system unstable press ctrl, alt, del to Reboot.

*Wife *- what is the relation between you & your Receptionist?
*Husband *- the only user with write permission.

*Wife *- what is my value in your life?
*Husband *- unknown virus detected.

*Wife *- do you love me or your computer?
*Husband *- Too many parameters..

*Wife *- I will go to my dad's house.
*Husband *- program performed illegal operation, it will Close.

*Wife *- I will leave you forever.
*Husband *- close all programs and log out for another User.

*Wife *- it is worthless talking to you.
*Husband *- shut down the computer.

*Wife *- I am going
*Husband *- Its now safe to turn off your computer


Saturday, 11 June 2011

காதலித்து பார்

காதலித்து பார் பார் கோவில் ஆகும்
பீர் தெய்வம் ஆகும்.
உன் இம்சை தங்காமல் போன் ஸ்பீக்கர் பழுதாகும், 
உன் போனில் அவளின் பேர் தவிர
மற்ற பெண்களின் போன் நம்பர் அழியும் அல்லது அழிக்கப்படும்.
காதலித்து பார்...
மூன்று நேரமும் போன் கதைத்து செவி பறை கிழிய வேண்டுமா?
காதலித்து பார்.  
அம்மா வீட்டுக்கும் அவளின் ஊருக்கும் 
மாறி மாறி பயணம் செய்யும் நிலை தேவையா....? 
எங்கே நீ நின்றாலும் என்ன நீ செய்தாலும் 
அவள் போன் எடுக்கும் போது அதை சொல்லவேண்டிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா....? 
அதற்காகவேனும் காதலித்து பார். 
அப்பாவிடம் மறைத்து பழகிய உண்மைகள் 
அவளிடம் அம்பலம் ஆகியதுண்டா? 
அடிக்கடி லவ் யு சொல்லும் வெட்டி தனம் தேவையா? காதலித்து பார்.  
இன்பாக்ஸ் பார்த்து அவள் சண்டை பிடிக்கவும் 
நம்பர் பிஸி அல்லது waiting பார்த்து 
அவள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படவும் 
10 மணிக்கு வரும் தூக்கத்தை
இரவு 1 மணிவரை சுமந்து கொண்டு 
போன் கதைக்கும் துன்பம் ஏற்படவும் 
காதலித்து பார். 
நண்பர்களை தனிமையாக்கி தனியே போய் போன் கதைப்பாய்
அவர்கள் திட்டும் போதும் நக்கல் அடிக்கும் போதும் 
சுரணை இல்லாதவன் போல சிரிக்க உன்னால் முடியுமா? 
காதலித்து பார்.

அவள் போன் எடுக்கும் போது 
ஒடனே receive பண்ண வேண்டிய வேகம் வேண்டுமா? 
அவள் அழும்போது
நம்ம weekness பூரா சொல்லவேண்டிய நிலை தேவையா? 
காதலித்து பார்.  
ஒரு தலையா காதலித்தால் 
மகனே தப்பினாய் 
இரண்டு பக்கமும் என்றால் 
சங்கு தான் மவனே....... 
(சாவ தேடி நாம போக கூடாது, சாவு தான் நம்மள தேடி வரணும்)

கடவுள் என் முன்னே நிற்கிறார்

 
தினமும் வேண்டுவேன் கடவுளை,
கடவுளே இதை கொடு, அதை கொடு,
உடனே கொடு, சீக்கிரம் கொடு,
இத்தனை நாட்களுக்குள் கொடு,
இத்தனை மாதங்களுக்குள் கொடு,
கொடு, கொடு, கொடு.
கடவுள் 'கேட்டார்' 
சரி கேட்டதையெல்லாம் தருகிறேன்
அத்துடன் நீ திருப்தி கொள்வாயா?

காதல்


அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு.
” நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். ”
ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர்.
சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா.  பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள்.
” லெட்டரைப் படி. ”
” அன்புள்ள விஸ்வத்துக்கு… ”
” இவன் பேரு விஸ்வமா ? லெட்டரை யாரு எழுதிருக்கா ? ”
” உங்கள் உயிரின் உயிரான ஆனந்தி எழுதிக் கொண்டது. உங்களைப் பிரிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. லாட்ஜ் விலாசம் எழுதியிருந்தீர்கள். வசதிக் குறைச்சல் என்றும் எழுதியிருந்தீர்கள். ஆனால் வேலை பற்றி ஒன்றுமே எழுதவில்லை. இந்நேரம் நிச்சயம் வேலை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மறுபடி எப்போது சந்திப்போம் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். உங்கள் அன்புக் காதலி ஆனந்தி. ”
” ச்.. ச்… காதலா ? பான்ட் பாக்கெட்டையும் பார்த்துடு ஏட்டு. ”
” இடது பக்க பாக்கெட்டில்  அந்தப் பொண்ணுக்கு பதில் எழுதி வெச்சிருக்கான். படிக்கிறேன் கேளுங்க. ‘ என் பிரியமான ஆனந்தி… நான் இங்கே மிகவும் மனம் நொந்த நிலையில் இருக்கிறேன். கொண்டு வந்த பணமெல்லாம் ஒரு பொட்டு மிச்சமில்லாமல் கரைந்து விட்டது. லாட்ஜ் வாடகை எப்படி அடைப்பேனோ தெரியவில்லை. நேற்று பூராவும் சிங்கிள் டீ குடிக்க வழியில்லாமல் கொலைப் பட்டினி. கையெழுத்து எப்படி நடுங்கியிருக்கிறது பார். ஒரு நேரம் வயிறார சாப்பிட ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கக் கையாலாகாதவனாய் இருக்கிறேன். ஏதோ ஒரு வேகத்தில் மன ஆறுதலுக்காக எல்லாவற்றையும் கடிதத்தில் எழுதி விட்டேன். இதை போஸ்ட் பண்ணி உன்னையும் அழ வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன்…. ” படிப்பதை நிறுத்தின கான்ஸ்டபிள், ” லெட்டர் பாதியோட நிக்குது ஸார். ” என்றார்.
” படிச்சவன். கை நீட்டி யாசிக்கவும் கூசியிருப்பான். பாவம். ”
இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனின் வலது பக்க பாக்கெட்டில்  கையை நுழைத்த ஏட்டு திகைத்தார். அந்த பாக்கெட்டிலிருந்து ஓர் ஐம்பது ரூபாய்த் தாள் வெளியே வந்தது.
” அம்பது ரூபாயைக் கையிலே வெச்சிக்கிட்டே பட்டினில செத்துப் போயிருக்கான்… ”
இன்ஸ்பெக்டர் அந்த ரூபாய்த் தாளை வாங்கிப் புரட்டினார். ரூபாய் நோட்டின் வெள்ளைப் பகுதியில் எழுத்துக்கள்.
” ‘வேலை கிடைக்க வாழ்த்துக்கள் விஸ்வம்.’ – காதலுடன் ஆனந்தி. “

பட்டிணத்தில் நாங்கள்....?????

காலை எழுவதும் ...மாலை உறங்குவதும்....இடையில் எந்த நினைவுகளும் இல்லாமல் உழைப்பதும்....
சில நேரங்களில் முற்றிலும் மறந்தே போய் விட்டோம்....
எங்களுக்கு பல சொந்தங்கள் இருக்கிறது என்பதை....

நாளும் பொழுதும் எங்களுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை என்ற நிலையிலேயே கழிகின்றன...
எல்லாரையும் விட்டுவிட்டு அனாதையா உழைத்து கொண்டு இருக்கிறோம் ,பட்டிணத்தில் நாங்கள்...

நாங்கள் வேலைக்கு செல்லும் போது ...பத்திரமா போயிட்டு வாப்பா னு சொல்லறதுக்கு எங்கள் தாய் தந்தையர் எங்களுடன் இல்லை....
போயிட்டு வர்ரேன்-மா என்று சொல்ல வாசலில் எங்கள் அன்னையை எதிர் பார்க்கிறோம் இல்லை...

காலை சாப்பாடு கனவாகி போய்விடும் ....
ஆயிரம் ருபாய்க்கு சாப்பிட்டாலும் அம்மாவின் கை பக்குவம் வருமா ??


காய்ச்சல் தலை வலி என்று தொலைபேசியில் சொல்லும் போதே துடித்து போய் விடுகின்றனர் எங்கள் அப்பாவும் ,அம்மாவும்....
கூட இருந்து பாத்துக்க முடியலையே-னு அம்மா ஒரே அழுகை....

"அய்யா Hospital போங்கய்யா" என்று அவர்கள் சொல்லும் போதே எங்களுக்கு குணமாகி விடும்.....

தொலைபேசியில் எப்படி பாசத்தை காட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை...
தொலைபேசி கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் ....????? ஐயோ !!!


தாயின் சிரிப்பையும் ...தந்தையின் கோபத்தையும் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது ....
தம்பி, தங்கைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது.....


திடீரென தங்கைக்கு திருமணம் என்று செய்தி வரும் ....திருமண நாள் அன்று விருந்தாளி போல் சென்று வருவோம்....

சொந்த வீடு கட்டி,, அழகு மட்டும் பார்த்தோம் ....


கீழ கல் கெடக்கு பார்த்து போப்பா னு சொல்லுற சொந்தங்களை எல்லாம் விட்டுட்டு ..
அடி பட்டு கெடந்தா கூட கேக்க ஆள் இல்லாத இடத்துல இருக்கிறோம் ...

எங்க ஊர்ல சொல்லுவாங்க ...பைய்யந்தான் வேலைக்கு போயிட்டானே அப்புறம் என்ன சந்தோசம்தான என்று....அவர்களுக்கு என்ன தெரியும் எங்கள் கஷ்டம்.....

நாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்ட பிறகும் ...வாசலில் நின்று கொண்டு ....
பேருந்தில் நாங்கள் கடந்து செல்லும் போது கையை காட்ட நிற்கும் சொந்தம்....
அடுத்த முறை ஊருக்கு செல்லும் வரை அவர்களின் சிரிப்பை எங்கள் கண்களில் சுமந்து கொண்டு பிணமாக நடமாடுகிறோம்.....

எப்படியும் எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க போகிறது என்ற ஏக்கத்துடனும் ...துக்கதுடனுமே நாங்கள் எங்கள்
வாழ்வை கழித்து கொண்டு இருக்கிறோம் ...

மதங்கள் கடவுளை வணங்க திருவிழாக்களை ஏற்படுத்தின.....
சத்தியமாக எங்களுக்குத்தான் திருவிழா....இன்று இரவு ஊருக்கு கிளம்புகிறோம் என்றால்,
நாளைக்கு காலைல வீட்ல சாப்பாடுடா என்ற சந்தோஷத்தில் நாங்கள் கிளம்புவோம்...
அது ஒரு தனி சந்தோசம்... அனுபவித்திருந்தால் தெரியும்.....


சொந்த ஊரில் இருப்பவர்கள் நினைக்கலாம்... இவர்கள் பட்டினத்திலே நல்லாதான இருக்காங்க ...நல்லா சம்பாதிக்கிறாங்க....நல்லா ஊர் சுத்துறாங்க....என்று....

சொந்த ஊரில் தாயின் மடியில் சிறிது நேரம் தலை சாய்த்து இருப்பதை விட ஒரு சந்தோசம் இருக்கிறது என்றால் ....!!!

நாங்கள் சந்தோசமாகவே இருக்கிறோம்.....!!!

MISS MY PARENTS AND MY LOVING RELATIVES.....

Friday, 3 June 2011

I am gonna miss my college life...........


09-04-2011 was my last day of last semester and now my college is officially over…. And I am an MCA now…. I dunno whether to smile or to feel sad…. But I choose to be happy :-)….

It was great experience being here…. Three years…. I learnt many things…. Now when I look back I feel….the changes… It’s the similar feeling I had when I graduated three years back… how time changes and how life keeps on moving without a pause…. People come… people go…. We laugh we cry…. Some really low moments…. Some really high…. Life is so beautiful in its own way….
In my last 3 years of MCA I met many people…. I was attached to many…. And worked and enjoyed with everybody I came across…. I discovered a different me…. More self centered, bad and self indulged me… And I improved as well in terms of public speaking, anchoring, organizing and so on…
All I can now recall is that first presentation when I was shivering with stage fear…. That first interview for organizing committee… those events we organized and clubs inaugurated… first event I hosted…..those proxies… talks….. Hanging out at shopprix and spice mall every now and then….. bunking classes…. Rehearsals… Practices….Improvements… Exams…. And so on…. Life was always fun and exciting here….
I have learnt very good problem handling skills and stress management….. How to meet deadlines ;)… by completing a week long assignment overnight… All those group tasks which compelled us to stay up all night with our gtalk on…. All those frequent semester exams….
These three years of my life were really good… I know what I have learnt….. I can sense the changes in me… I met some really great people….
 Apart from these  people….. I met many who contributed to my life in one or the other way…. I was encouraged, appreciated, criticized and discouraged time to time…. But it always added towards my learning and helped me to learn and become better with every step…
I would love to mention the names of people who were always there for me… whether we talk daily or not and those who were always there for me as a life supporting system…. But I’ll not because I don’t wanna hurt anybody my skipping their name by mistake….. :D…. those who are special for me know this and understand this….
Everybody expects from their family because they are the people sent by God for us…. It’s very difficult to find people outside family from whom you can expect…. And I am one lucky person…. I met such people at every step of my life….. :-) :-)
I feel that I am kinda detached soul…. But still I miss people from my past…. Places… time… memories… tears and smiles…. I can relate to everything I left behind…. And touchwood I feel blessed because whenever I look back I find my people standing there for me… :-)
Now, I am going to start with my professional life… I just wish all my friends  all the best for their future endeavors…
 I hope to stay connected with you all….May God Bless you….
And thank you God!

நண்பனில்லாத பொழுதுகள்


ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாய்
 அடர்ந்த இருள் சுமந்து வருகின்றன
 நண்பனில்லாத நிமிடங்கள்..
  
குழந்தையாக இருக்கும்போதே

தூய்மையின் வெற்றிடம் நிரப்பும்

முதல் ஸ்நேகம்..


 தொடரும் பள்ளி நாட்களில்

கேலியும் கிண்டலும் சண்டையுமாய்

தொடரும் நட்புக்காலங்கள்..


அழுகையில் அழுது

சிரிப்பில் சிரித்து

அவன் துயர் துடைக்கும் விரல்களாய்

நம்மை மாற்றி விடுகிறது தோழமையின் சக்தி..


எவ்வளவுதான் சண்டைபோட்டாலும்

மறக்கமுடிவதில்லை நண்பனை..

கல்லூரிக்காலங்களில்

காதலி தரும் வலிகளை

நண்பன் ஒருபோதும் தருவதில்லை


மச்சி

டேய்

மாமு

எப்படியெல்லாம் அழைக்கிறேன்..

அதைவிட

தகப்பனாய்

தாயாய்

சகோதரனாய்

சமயத்தில் காதலியாய்

பல பாத்திரங்களில் நிறைகிறான் என் வாழ்வில்..



நண்பனில்லாத பொழுதுகள் பற்றி

எழுதவே நடுங்குகிறேன்..

நிழலாய்த்தொடர்நதவன்

நிஜத்தில் அருகிலில்லை

என்பது உயிரை உலுக்குகிறது..



காதலி பிரிந்த போது

நண்பனிடம் சொல்லியழுதேன்..

இன்று

நண்பன் பிரிந்தபோது

சொல்லியழ யாருமில்லை..


கடன் அன்பை முறிக்குமா?

இல்லவே இல்லை

கடன் அன்பை வளர்க்கும்..


பொருளாதராரம் துரத்திய அவன் வாழ்க்கை

நடுத்தெருவில் நர்த்தனம் ஆடியபோது

துயர் சுமந்த நெஞ்சுடன் தூரதேசம் போய்விட்டான்..



இன்று நண்பனில்லாத பொழுதுகள்

முழுவதுமாய் என்னைக்கொன்று

தீர்க்கிறது..



மின்னஞ்சல்

எஸ.எம்.எஸ்

அலைபேசி அழைப்பக்கள்

எதுவுமே அவன் அருகாமையை

தருவதாயில்லை..

என் கண்ணீர் முகம் தாங்கும்

அவன் தோள்களை அவைகள் எப்படித்தரும்?



அவசர வாழ்க்கையின் சடுதியான வேகத்தில்

அவனை மட்டும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்..

அதுதான் நட்பின் வலிமை..



இப்போது தனித்தனியே தொடர்கிறது

எங்கள் பயணம்..

எங்கோ ஒரு புள்ளியில்

மீண்டும் சந்திப்போம்..

அதுவரை

நண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை

A Friend.....


 Is someone that everyone needs 
A friend 
Is that special one 
A friend 
Is someone you tell EVERYTHING 
A friend 
Is someone you never lie to 
A friend 
Can be a boy or a girl 
A friend 
Is someone that is always their 
A friend 
Will always listen to you 
A friend 
Always has input to give 
A friend 
Will never leave you in the dust 
A friend 
Will help you through the thick and the thin 
A friend 
Will always stand by your side 
A friend 
Will never let you down 
A friend 
Is someone everyone needs 
What would you do if you didnt have a friend? 

முன்னாள் சிநேகிதிகள்...


போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.


மூன்று வேளைகளும் 
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.


என் மகளைத் தன் மகனுக்குக் 
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.


திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது

எங்கள் நட்பு!

என் தோழியே......


கோவிலுக்கு செல்லும் போது
என் காலனியை மட்டும் அல்ல......
என் தீய எண்ணங்களையும்
வெளியே விட்டே செல்கிறேன்!

உன்னிடம் பேசும் போது
காதலை மட்டுமல்ல......
காமத்தையும் மறந்தே
உன்னிடம் பேசுகிறேன்!

கோவிலுக்குள் தீய
எண்ணங்களுக்கு இடமில்லை......
ஆண் பெண் நட்புக்குள்
காமம் காதல் வருவதில்லை.....

பேருந்து நிலைவரை
நம் நடை பயணத்தை
கடலை என்று கூறும்
தூரத்து நண்பர்களின்
கேலி பேச்சுக்களும்......

நம் நட்பை காதல் என்று
அரிதாரம் பூசும்
நம் வகுப்பு நண்பர்களும்.....

இவர்கள் பேச்சில்
மனமுடையும் போது
அவர்கள் பேச்சை விட்டு
 தள்ளுடா.......
 என்ற உன் வார்த்தைகளும்.......

புன்னகை நிமிர்ந்து
பார்த்தேன்.......
 என் சக வயதில்
இன்னொரு  அன்னையை!

ஒளவை அதியமான் நட்பு
ஆண் பெண் நட்பு
உதாரணமா........
நம் நட்பு மட்டும்
இவர்களுக்கு ஏளனமா........

அன்றைய நட்பை
 நாம் உதாரணம் காட்டினோம்!
நம் நட்பை
 நாளைய தலைமுறை
 உதரணம் காட்டட்டும்!!

நீ இல்லாதபோது!....


நீ இல்லாதபோதுதான் புரிகிறது 
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால் 
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன் 
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான் 
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ 
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு 
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....