Pages

Friday, 3 June 2011

நண்பனில்லாத பொழுதுகள்


ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாய்
 அடர்ந்த இருள் சுமந்து வருகின்றன
 நண்பனில்லாத நிமிடங்கள்..
  
குழந்தையாக இருக்கும்போதே

தூய்மையின் வெற்றிடம் நிரப்பும்

முதல் ஸ்நேகம்..


 தொடரும் பள்ளி நாட்களில்

கேலியும் கிண்டலும் சண்டையுமாய்

தொடரும் நட்புக்காலங்கள்..


அழுகையில் அழுது

சிரிப்பில் சிரித்து

அவன் துயர் துடைக்கும் விரல்களாய்

நம்மை மாற்றி விடுகிறது தோழமையின் சக்தி..


எவ்வளவுதான் சண்டைபோட்டாலும்

மறக்கமுடிவதில்லை நண்பனை..

கல்லூரிக்காலங்களில்

காதலி தரும் வலிகளை

நண்பன் ஒருபோதும் தருவதில்லை


மச்சி

டேய்

மாமு

எப்படியெல்லாம் அழைக்கிறேன்..

அதைவிட

தகப்பனாய்

தாயாய்

சகோதரனாய்

சமயத்தில் காதலியாய்

பல பாத்திரங்களில் நிறைகிறான் என் வாழ்வில்..



நண்பனில்லாத பொழுதுகள் பற்றி

எழுதவே நடுங்குகிறேன்..

நிழலாய்த்தொடர்நதவன்

நிஜத்தில் அருகிலில்லை

என்பது உயிரை உலுக்குகிறது..



காதலி பிரிந்த போது

நண்பனிடம் சொல்லியழுதேன்..

இன்று

நண்பன் பிரிந்தபோது

சொல்லியழ யாருமில்லை..


கடன் அன்பை முறிக்குமா?

இல்லவே இல்லை

கடன் அன்பை வளர்க்கும்..


பொருளாதராரம் துரத்திய அவன் வாழ்க்கை

நடுத்தெருவில் நர்த்தனம் ஆடியபோது

துயர் சுமந்த நெஞ்சுடன் தூரதேசம் போய்விட்டான்..



இன்று நண்பனில்லாத பொழுதுகள்

முழுவதுமாய் என்னைக்கொன்று

தீர்க்கிறது..



மின்னஞ்சல்

எஸ.எம்.எஸ்

அலைபேசி அழைப்பக்கள்

எதுவுமே அவன் அருகாமையை

தருவதாயில்லை..

என் கண்ணீர் முகம் தாங்கும்

அவன் தோள்களை அவைகள் எப்படித்தரும்?



அவசர வாழ்க்கையின் சடுதியான வேகத்தில்

அவனை மட்டும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்..

அதுதான் நட்பின் வலிமை..



இப்போது தனித்தனியே தொடர்கிறது

எங்கள் பயணம்..

எங்கோ ஒரு புள்ளியில்

மீண்டும் சந்திப்போம்..

அதுவரை

நண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை

No comments:

Post a Comment