கோவிலுக்கு செல்லும் போது
என் காலனியை மட்டும் அல்ல......
என் தீய எண்ணங்களையும்
வெளியே விட்டே செல்கிறேன்!
உன்னிடம் பேசும் போது
காதலை மட்டுமல்ல......
காமத்தையும் மறந்தே
உன்னிடம் பேசுகிறேன்!
கோவிலுக்குள் தீய
எண்ணங்களுக்கு இடமில்லை......
ஆண் பெண் நட்புக்குள்
காமம் காதல் வருவதில்லை.....
பேருந்து நிலைவரை
நம் நடை பயணத்தை
கடலை என்று கூறும்
தூரத்து நண்பர்களின்
கேலி பேச்சுக்களும்......
நம் நட்பை காதல் என்று
அரிதாரம் பூசும்
நம் வகுப்பு நண்பர்களும்.....
இவர்கள் பேச்சில்
மனமுடையும் போது
அவர்கள் பேச்சை விட்டு
தள்ளுடா.......
என்ற உன் வார்த்தைகளும்.......
புன்னகை நிமிர்ந்து
பார்த்தேன்.......
என் சக வயதில்
இன்னொரு அன்னையை!
ஒளவை அதியமான் நட்பு
ஆண் பெண் நட்பு
உதாரணமா........
நம் நட்பு மட்டும்
இவர்களுக்கு ஏளனமா........
அன்றைய நட்பை
நாம் உதாரணம் காட்டினோம்!
நம் நட்பை
நாளைய தலைமுறை
உதரணம் காட்டட்டும்!!
நண்பா சிறப்பு டா....உம் எழுத்துகள் வளமையுடையனவாக உள்ளது...
ReplyDelete